வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹60.அழகிய காதல் நிலவே! - விமர்சன திரி

Priyanka Muthukumar

Administrator
இக்கதைக்கான விமர்சனத்தை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
 

Ruby

Well-known member
#அழகிய_காதல்_நிலவே

அனுஷ் வரதன் யாரை கண்டாலும் இவ்னுக்கு வெறுப்பு தாங்க 🤭🤭🤭

பள்ளிக்கு புது correspondent ஆ போறான்... அங்கே ஆசிரியையான அஸ்மி வாய்ஸ் கேட்டதும் வெறுப்பு😳😳 ஏன் டா🤔

அவனுக்கு நிச்சயிக்க பட்டு இருக்கும் நிகிதாவை பார்த்தாலே வெறுப்போ வெறுப்பு😂😂😂 அப்ரம் ஏன் டா நிச்சயம்🤔🤔

அவங்க அம்மா மேல அதுக்கும் மேல வெறுப்பு😳😳😳 என்ன டிசைன் டா நீ🙄 உனக்கு என்ன தான் டா பிரச்சனை🤔

நிகி வச்சு அஸிய கடுப்பாக்க நினைச்சு, நிகியால் அவன் தான் கடுப்பாகி போறான்😂😂😂

அஸ்மி🌹 தான் உண்டு தன் வேலை உண்டுனு இருக்க அவளுக்கு அனிஷ் ஒரு தொல்லை என்றால்🙄 ஹேமந்த் ஒரு தொல்லை🙄 அதிர்ச்சியா இவளுக்கு ஒரு மகன் வேற 😳 இவனுங்களுக்கு இடையில் என்ன சம்மந்தம்🤔🤔🤔

கண்ணன் வேலை இல்லாது இருக்க... அவனின் தாய் கலை அவனை மிக கேவலமாக நடத்த, நண்பனின் மூலம் கிடைக்கும் வேலைக்கு சென்றால், அங்கு அவனின் ஒருதலை காதலி ஈஸ்வரி😍😍😍

நடக்கும் சில விஷயங்களால் எதிர்பாராத விதமாக இருவரும் திருமணம் புரிய 😳 மகனுக்கு பணக்கார பெண்ணை பேசி இருக்கும் கலைவாணி கடுப்பாகி 😳

மகனின் முன் நடித்து😡😡 பின் பிரிக்க பலவிதமான சதிகளை செய்யுறாங்க 😡 வெற்றி பெற போவது, இவங்க காதலா🤔 அவரோட சதியா 🤔🤔

திருநெல்வேலி.... தைரியமான, ஊரே புகழும் பண்ணையாரம்மா ❤️ ஊருக்கு புதிதாக வரும் பெண் அவரினைப் பற்றி அறிந்து கொள்ள அவரைப் பின்பற்றி போக, அங்கு அதிர்ச்சி அவளுக்கு காத்து இருக்கு அவர் பிள்ளை வடிவில்😳😳🤔

அவர்களை பற்றி அறிந்து, பண்ணையாரம்மா அவங்களுக்கு உதவிட மனதில் முடிவெடுத்து தன் ஊர் போகிறாள்... அவளால் முடிந்ததா🤔🤔

இப்படி மூன்று கோணங்களும் ஒரு புள்ளியில் சந்தித்தால்......... நமது குழப்பம், கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும்..... கண்டுபிடிக்கும் விதத்தில் இருந்தாலும் எப்படி நடந்து இருக்கும் என்ற கேள்விகளுக்கு பதிலை அவர் நடையில் தந்திருக்கிறார் ஆசிரியர்❤️

நாகேஸ்வரி🤎 பொண்ணுக்கு பயங்கர support... அவ தைரியமா, தப்பை தட்டி கேட்டு, ஸ்ட்ராங் ஆ இருக்க இவங்க ஒரு காரணமா இருக்கும்.. என்ன செஞ்சாலும் உடன் நிக்குராங்க, ஊக்கம் குடுக்குறாங்க🤩 சொல்லாம அவ செஞ்ச அவ்வளவு பெரிய விசயத்தை கூட பெரிது பண்ணல அவங்க...

பத்மானந்தம்😍 இப்படி ஒரு அப்பாவுக்கு அப்படி ஒரு மகள்🤮🤬 மகள் வாழ்வு என்று எல்லாம் இல்லாது நியாயமாக இருக்கிறார்🤩 என்ன ஆனாலும் என்று விட்டு கொடுக்காது இருக்கும் ஆட்கள் மத்தியில் இவர் வேற தான்...

பண்ணையாரம்மா❤️ ஒரு சீன் ல செம்மையா ஸ்கோர் பண்ணிட்டாங்க🤩 கணவனையும், மகளையும் பத்தி பேசும் போது அவங்களோட அந்த பெருமை😊 மகளால் என்ன விளைந்து இருந்த போதும் அவளின் பக்க நியாயம் புரிந்து அவளை காக்க அவர் செய்வது எல்லாம்👏

மலர்💙 இவளோட குறும்புகள் அருமை.. குறும்பு பெண்ணின் இன்னொரு முகம்😱 பண்ணையாரம்மா அவங்களுக்காக அவ செய்யுறது சின்ன விசயம் என்றால் மனம் உவந்து செய்வது சூப்பர்ப்🤩

மலர், சின்மயி, அஷி நட்பு சூப்பர்🥰 நட்புக்கு தன்னால் முடிந்த நல்லவைகளை செய்ய நினைக்கும் நண்பர்கள்😍

ஈஸ்வரி❤️ படுபயங்கர தைரியமான பெண் ... ஆனால் ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு, அவன் நிம்மதிக்கு என்று எத்தனை கஷ்டங்கள்😢 யோசிக்காது மனதை குழப்பி கொண்டதன் விளைவுகள் சூழ்ச்சியில் சிக்கி எவ்வளவு கஷ்டம்😢 ஆனால் இவ பண்ண சில விசயம்😡😡 தைரியம் எங்க போச்சோ🤦🤦 ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கை வச்சு நடந்ததை ஆராய்ந்து இருக்கணும்🤦

கண்ணன் இவன் மேல பல கடுப்பு எனக்கு😡 அம்மா பத்தி தெரிஞ்சும் இவன் செஞ்ச எல்லாம், அதுவும் கடைசியா பண்ணது முட்டாள்😡 இவன் காதல் சூப்பர்😍😍 ஆனால் தெளிவாய் ஆராயாமல் இருக்கிறது தான் கடுப்பு😏 என்ன பேசின போதும் அவன் குடும்பத்தை விடாம இருக்கிறது, அவளின் கஷ்டம் புரிந்து அவளுக்காக அவன் நிற்பது, செய்வது, அவள் நிம்மதிக்காக தனியா செல்வது எல்லாம் சூப்பர்🥰

அனிஷ் எப்போ பாரு மூஞ்சியில் முள்ளை வச்சிட்டு🤦🤦 ஒழுங்கா என்ன ஏதுன்னு விசாரிக்காமல்😡 ருத்ரணை பார்த்தும் உடனே விசாரிக்காமல் எதுக்கு வெயிட் பண்றான் புரியலை, அதுவா தெரியும் வரை🤦🤦 பெரிய பிள்ளை தான அவந்தி ஸ்கூல் ல சேர்க்காமல் வச்சிட்டு, எல்லார் மேலயும் ஏன் கோபப்படனும் 😡 லூசு..... அவந்தி பாவம்...

காதல்ல தெளிவா இருக்கானுங்க எல்லாரும்😂🤩😍 இவனோட காதலும்🤩🤩 பொண்ணுங்க ரொம்ப தெளிவு பா காதலில்.. ஆரம்பம் முதல் இறுதிவரை 😍😍

அஸ்மி புள்ளை பூச்சி போல இருக்கா ஆனால் ஹேமந்த் அவனுக்கு செஞ்ச விசயம்👏 பிறவி குணம் மாறாதுப்பா 😆🤣 தெளிவா பிளான் பண்ணி execute பண்ணிட்டா🤣🤣 ஒரு அறை என்றாலும்👌👏

ருத் ஏக்கம்😢 நிகிதா, கலைவாணி🤬😡🤐

சில விசயங்கள் தெளிவு இல்லாம இருக்கு... அதை நான் ஆல்ரெடி comments thread ல site ல போட்டு இருக்கேன்... அவை தெளிவாய் இருந்து இருக்கலாம்... கதை நல்லா இருக்கு😍 காதல், பொறாமை, துரோகம், நட்பு, பாசம் எல்லாம் கலந்து கொடுத்து இருக்கீங்க🥰🥰

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💐💐💐
 
Last edited:

Gowri

Well-known member
#பிரம்மாஸ்திரம்_2023

#கௌரிவிமர்சனம்

#அழகிய_காதல்_நிலவே...

இதுவும் காதல் கதை தான், ஆன இந்த சீரியஸ் கதை எல்லாம் வரும் இல்ல, வேறு வேறு மனிதர்கள், அவங்க வாழ்க்கை எல்லாரையும் ஒரே இடத்தில் இணைக்கும் இல்ல அது போல மூணு விதமா சொல்லி அதை எல்லாம் கடைசில சரியா இணைச்சி இருக்காங்க ரைட்டர்👏👏👏👏👏👏👏

அனிஷ், எப்ப பாரு காண்டாவே சுத்தரான் ...பயபுள்ளைக்கு வைத்த வலிக்குமா தெரியல🤭🤭🤭🤭🤭🤭

அதுவும் அவன் அம்மான்னா சொல்லவே வேணாம் அவளோ வெறுப்பு😳😳😳😳

அவன் பிள்ளையிடம் மட்டும் அதிக பாசம்🥰🥰🥰🥰🥰

இவன் ஏன் இப்படி இருக்கான், என்ன கோவம் அவன் அம்மா மேல, இவன் மனைவி எங்க??????

அஷ்மி, ஸ்கூல் டீச்சர், பசங்களுக்கும் ரொம்ப பிடிச்ச டீச்சர், குட்டி வாண்டு ஓட அம்மாவும் கூட.....அவ பாட்டுக்கும் இருக்கா.....ஆன இவ மேலையும் ஏக கடுப்பு அனிஷ்க்கு😅😅😅😅😅.....ஏன்??????

இவன் இவளை கடுப்பு அடிக்கறது பத்தாதுனு ஒரு குட்டி வில்லன் வேற🤦🤦🤦🤦🤦🤦

இது ஒரு பக்கம்....

கண்ணன், VIP... ஒருதலை காதலும் இருக்கு🤩🤩🤩🤩🤩.....

இவனுக்கு வேலை இல்லைனு ஒரு அம்மாவும் தங்கையும் பேச கூடாதா பேச்சி எல்லாம் பேசராங்க அவனை🥺🥺🥺🥺🥺

அதனால, இவன் நண்பன் மூலமா வேலை கிடைக்க, அவங்க குணம் அப்படியே அந்தர் பல்டி 😡😡😡😡😡

அங்க அவனோட ஒத்த ரோசா ஈஷ், அவளும் அங்க தான் வேலை செய்யரா🤩🤩🤩🤩🤩🤩

இப்படி பார்த்தல், காதல்னு போய்ட்டு இருக்கும் போது சில எதிர்பாரா சம்பவங்களால் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கராங்க.......

ஈஷை இவன் ஆத்தாளுக்கு சுத்தமா பிடிக்கல.....சோ பல கேடி வேலை பார்த்து ரெண்டு பேரையும் பிரிச்சி விட்டுறுச்சி🤷🤷🤷🤷🤷🤷🤷

இது ஒரு பக்கம்.......

கிராமத்தில், கெத்தானா பண்ணையாரம்மா....ரொம்ப பாசமானவங்களும் கூட......

நல்ல வசதி, ஆள் பலம் இருந்தும் அவங்க மகள் கூட இல்லாம வருந்தராங்க😒😒😒😒😒

இது ஒரு பக்கம்.....

இவங்க எல்லாத்தையும் தான் ஒரு புள்ளியில் சேர்க்கரங்க ரைட்டர், இவங்களுக்கு உள்ள என்ன சம்மந்தம் அது எல்லாம் சுவாரிஸ்யமா சொல்லி இருக்காங்க ரைட்டர் ஜி👏👏👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

 

santhinagaraj

Well-known member
பிரம்மாஸ்திரம் 2023


அழகிய காதல் நிலாவே

விமர்சனம்

குடும்பம்,காதல், நட்பு கலந்த ஒரு கதை.

அனீஸ்வரதன் -எப்பவும் அனலோட எல்லார் மேலயும் ஒரு வெறுப்போட சுத்துறான். பெற்ற தாய் மீது வெறுப்பு ஒரு படி அதிகமாகி கொலை காண்டோட சுத்துறான் அவன் பெற்ற மகளிடம் மட்டும் அத்தனை பாசம் இவனுக்கு.

அஸ்மிதா - தானுண்டு தன் வேலையுண்டுனு இருக்கும் டீச்சர் அவரிடம் படிக்கும் மாணவர்களுக்கும் உடன் வேலை பார்ப்பவர்களுக்கும் அவ்வளவு பிடிக்கும் இவளை.

அஸ்மி வேலை பார்க்கும் ஸ்கூலுக்கு புது கரஸ்பாண்டன்டாக வரும் அனீஷ்க்கு அஷ்மி மீது வெறுப்பு அஷ்மியை வெறுப்பேத்த அவன் நிக்கியிடம் காட்டும் நெருக்கம் , வேலையில் இவன் கொடுக்கும் நெருக்கடினு இவன் தொல்லை ஒருபுறம் என்றால் அஷ்மியை தவறான பார்வையில் பார்க்கும் ஹேமந்த் ஒரு தொல்லை. இவர்கள் தொல்லையெல்லாம் சமாளித்து தன் மகனையும் சேர்த்து வேலையையும் சரியாக வழி நடத்திச் செல்லும் அஷ்மியின் திறன் சூப்பர்.👌👌👌

இவர்கள் ஒரு பக்கம்

கண்ணன் -ஈஸ்வரி
கண்ணனுக்கு வேலை இல்லை என்று அவனது அம்மாவும் தங்கையும் பேசாத பேச்சு இல்லை. பெற்ற தாயும் உடன் பிறந்த தங்கையுமே அவ்வளவு அவமானப்படுத்த
நண்பனின் உதவியின் மூலம் ஒரு பள்ளியில் வேலைக்கு சேர்கிறான். அதே பள்ளியில் தான் அவனுடைய காதலி ஈஸ்வரியும் பணிபுரிகிறாள்.

மகன் வேலைக்கு போய் கை நிறைய சம்பளம் வாங்கிய உடனே கண்ணனின் தாய் அப்படியே தோசையை திருப்பி போட்ட மாதிரி குணம் மாறி விடுகிறார். மகனுக்கு பெரிய பணக்கார வசதியான வீட்டுப் பெண்ணை கல்யாணம் பண்ணி வசதியாக வாழ திட்டம் போட கண்ணன் தான் காதலிக்கும் ஈஸ்வரி அவசரமாக வீட்டில் சொல்லாமல் கல்யாணம் பண்ணி கூட்டி வர

பல சதி வேலைகளை செய்து இருவரையும் பிரித்து விடுகிறார்?

இது ஒரு பக்கம்

கிராமத்தில் ரொம்ப கெத்தான ஆள்பலமும் பணபலமும் நிறைந்த பண்ணையாரம்மா ஊருக்கே அம்மாவாக இருந்தாலும் தன்னோட சொந்த பொண்ணை விட்டு பிரிஞ்சு இருக்காங்க. படிப்பு முடிஞ்சு கிராமத்தை சுற்றிப்பார்க்க வரும் மலர் பண்ணையார் அம்மாவின் அன்பில் நெகிழ்ந்து அவரின் மகளை அவரோடு சேர்த்து வைப்பதாக சத்தியம் செய்து விட்டு வருகிறாள்.

இப்படி இருக்க இவங்க எல்லாரையும் வெவ்வேறு
சூழ்நிலைகளில் அறிமுகப்படுத்தி கடைசியில் ஒரே புள்ளியில் இணைச்ச விதம் அருமை 👏👏

அனிஷ்க்கு பெற்ற தாயிடம் ஏன் அவ்வளவு வெறுப்பு? அனிஷ்கும் அஷ்மிதாக்கும் என்ன தொடர்பு? கண்ணனும் ஈஸ்வரியும் மறுபடியும் சேர்ந்தார்களா? மலர் பணியாரம்மாவோட மகளை அவங்களோட சேர்த்து வைத்தாளா? என்ற கேள்விகளோடு கதையை ரொம்ப சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார் ரைட்டர் 👌👌👌

மலர் சின்மாயி நட்பு செம்ம 👏👏👏

தன்னைத் தவறாக காட்டப் போகிறான் என்று தெரிஞ்சும் வேணும்னே ஏன் அஸ்மிதா உனக்கு அப்படி ஒரு வீடியோவை எடுக்க சான்ஸ் கொடுக்கணும்? வீடியோவை எடுத்த பிறகு அவனை அடிச்சு அதை டெலிட் பண்ண வைக்கிறதுக்கு பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாமே என்ற எண்ணம் தான் வருது.

அனீஸ் அண்ட் அஸ்மிக்கு தங்கள் பெற்ற பிள்ளைகளை அடையாளம் தெரியவில்லை அனிஷ்காவது பரவாயில்ல அவன் மகன் அவனுக்கு பிறந்ததே தெரியாமல் இருப்பதால் அடையாளம் தெரியவில்லை என்லாம்.
ஆனா அஸ்மிதாவுக்கு பெற்று ஒரு வயசு வரை உடனிருந்த மகள் எப்படி அடையாளம் தெரியாமல் போனால்?

நாலு வருஷத்துக்கு முன்னாடியே வேலையில் சேர்ந்தவனை அவன் சேர்ந்து முதல் வருட ஆனுவல் டே கொண்டாட்டம் னு சொல்லி இருந்ததில் இடையில இருந்த அந்த நாலு வருஷம் என்ன ஆச்சு?
அஸ்மியை எங்கெஙல்லாமோ தேடுனவன் அவ ஸ்கூலில் ஏன் தேடலை? அப்படி இல்லையென்றாலும் அவளை ஸ்கூலில் பார்த்த போது அவளைப் பற்றி ஏன் விசாரிக்கல அவனோட மகன பத்தி தெரிஞ்சுக்கல? இப்படி நிறைய கேள்விகளுக்கு சரியான விளக்கம் இல்லை இந்த கேள்விகளுக்கெல்லாம் சரியான விளக்கம் கொடுத்திருந்தால் இன்னும் கதை சிறப்பாக இருந்திருக்கும்.

நிறைய இடத்தில் எழுத்து பிழைகள் இருக்கு. நெடில் எழுத்துக்கள் வரவேண்டிய நிறைய இடங்களில் குறில் எழுத்துக்களை பயன்படுத்தி இருக்கிறீர்கள்
அதையெல்லாம் கொஞ்சம் சரி பார்த்துக் கொண்டால் உங்கள் எழுத்து திறமை இன்னும் சிறக்கும்

நல்ல கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
 
Last edited:

zeenath

Member
பிரம்மாஸ்திரம்2023
#அஸ்திரம்60
#அழகியகாதல்நிலவே
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்... அஸ்மிதா... பள்ளியில் வேலை பார்க்கிறாள் குறும்பு செய்யும் குழந்தைகளை தன் அன்பால் கட்டி வைத்திருக்கிறாள்.. தன்னிடம் அத்துமீறும் வம்பர்களிடம் இவளின் கோபம் முகம் எட்டி நிற்க வைக்கிறது அவர்களை... தன் குட்டி மகன் ருத்ரனுடன் வாழும் இவளுக்கு மகனின் குறும்புத்தனத்திலும் செயல்களிலும் தன் மனம் கவர்ந்த கண்ணனை நினைவுகளில் தேடி மனதில் பொக்கிஷம் ஆக்கிக் கொள்கிறாள்...அங்கு இவளுடன் வேலை செய்யும் மலர் தன் அப்பாவி குணத்தால் கவர்ந்து விடுகிறாள் அனைவரையும்.. பள்ளி விடுமுறையில் ஒரு கிராமத்திற்கு செல்லும் இவள் அங்கு இவள் காணும் பண்ணையார் அம்மாவின் அதிரடியில் முதலில் பயந்தாலும்... பின் அவரின் அன்பான குணத்தில் கவரப்பட்டு அவரின் மனத் துயரை போக்க முடிவு செய்கிறாள்.. அனிஷ்... தன் மகளோடும் தன் தாயுடனும் வாழ்ந்து வரும் இவன் ஏனோ மிகுந்த கோபத்தில் இருக்கிறான் தன் தாயின் மீது... தான் பொறுப்பேற்று இருக்கும் பள்ளியில் அஸ்மிதாவை காணும் இவன் அவள் மேல் மிகுந்த கோபம் கொண்டிருக்கிறான் இவனின் கோபத்திற்கான காரணம் என்ன... நிகிதா... அனிஷின் மனதில் இடம் பிடித்து அவனின் வாழ்வில் நுழைய நினைக்கிறாள்.. கிளை கதைகளாக இருக்கும் அனைத்தும் எப்படி ஒரு புள்ளியில் இணைந்தது என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. எழுத்துப் பிழைகளை குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்... விறுவிறுப்பாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🥰
Good luck dear 🥰💐❤️
 
Top