#gossip_glories_25
#கௌரிவிமர்சனம்
#பனியில்_உருகிய_பகலவன்
காதல் கதை தான்….
லதா, சரியான திமிர் பிடித்த பெண்….அப்படி கூட சொல்ல கூடாது…
திமிர் சில இடங்களில் நல்லா இருக்கும்…..
ஆன இவ, ஆணவம், தான் தான் அழகு அப்படிக்கற அகங்காரம் எல்லாம் நிறைந்த பொண்ணு….
அதுக்கு பாதி காரணம் அவ பெற்றோர் தான்….
முக்கியமா அவ அப்பா….
அவள் அதிஷ்ட தேவதை அப்படினு அவர் இஷ்டத்துக்கு வளர்த்து வெச்சி இருக்கார்….
தன் அழகின் மேல் கொண்ட கர்வத்தில்….
பல பேரை பின்னால் அழைய வைப்பது தான் வாடிக்கை….
அதில் தப்பித்தவன் தான் பிரதீஷ்….
அதில் அவ கர்வம், அடிவாங்க…அவனையே கல்யாணம் பண்ண நினைக்கரா….
திட்டதட்ட ஆன்டி ஹீரோயின்….
அதுக்கு அவ அப்பாவும் ஓகே சொல்ல…
அவ அப்பா மாப்பிள்ளை கேட்டு போக, அவருக்கு ஷாக் அவனை பார்த்து….
ஏன்????
அவனும், அவர் பெண்ணை கல்யாணம் செய்ய, பெண் எடுத்து பெண் கொடுத்தா ஓகேனு சொல்ல…..
அவரும், பெண் மேல அதீத பாசத்தால்…
சரினு சொல்லிட்டார்….
இனி????
கதை….நிறைவு ஃபீல் தரல….
சில இடங்கள் அப்படியே மாறின ஃபீல்….
லதா எப்படி அப்படியே திருந்தினா?????
அவ அப்பாவை ஏமாத்த பார்த்த மேனேஜர்?????
அவ அப்பா திருந்தினாரா????
இது எல்லாம் incomplete…..
இன்னும் பிரதீஸ் காதலே எனக்கு வியப்பு….
ஏனோ ஒட்டல எனக்கு….
போட்டிக்கு எழுதும் போது, கதையில் இன்னும் தெளிவு வேணும், அழுத்தம் வேணும்…..
இனி வரும் கதைகளில் கொஞ்சம் கவனமா எழுதுங்க ரைட்டர்….
போட்டியி
ல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர்




