Naga Novels
New member
வணக்கம் நட்பூக்களே,
எனது பெயர் நாகா, நான் பிரதிலிபியில் முதன் முதலில் எழுத ஆரம்பித்தேன், இப்போது பொம்மு நாவல்கள் தளத்திலும் எனது கதைகளை பதிவிடுகிறேன்.
பெரியதாக சொல்லக்கூடிய அளவிற்கு என் எழுத்துக்கள் இன்னும் பேசப்படவில்லை.
நானும் எனக்கான ஒரு அங்கீகாரம் மற்றும் முகவரிக்காக தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் .
இரண்டு வருடமாக எழுதுகிறேன், 12 கதைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன்.
இரண்டு கதைகள் ஒருங்கிணைந்த ஒரு புத்தகமாக மெளனகாதல், மற்றும்
என்னுள் கலந்தவள் என இரண்டு புத்தகங்கள் ஒரு தனியார் வெப்சைட் மூலமாக புத்தமாக போட்டுள்ளேன்.
மீதி கதைகள் பிரதிலிபியில் உள்ளது.
எனது கனவு ,எனது புத்தகங்களை என்று நான் புத்தக கண்காட்சியில் பார்ப்பேன் என்பதுதான்.
எனது கதைகள் இயல்பாகவும், அதோடு சமூகத்தில் நடக்கும் முரண்களை முன்னிருத்தி இருக்கும்.
இப்போது தான் கமர்ஷியலா எழுத ஆரம்பித்திருக்கிறேன்😀😀😀😀
அவ்வளவு தான் நான், எனக்கு உங்களது ஊக்கமளிப்பு மிகவும் அவசியம். அதை தருவீர்கள் என நம்புகிறேன் 😊😊😊
நட்புடன்
💙 நாகா 💙
எனது பெயர் நாகா, நான் பிரதிலிபியில் முதன் முதலில் எழுத ஆரம்பித்தேன், இப்போது பொம்மு நாவல்கள் தளத்திலும் எனது கதைகளை பதிவிடுகிறேன்.
பெரியதாக சொல்லக்கூடிய அளவிற்கு என் எழுத்துக்கள் இன்னும் பேசப்படவில்லை.
நானும் எனக்கான ஒரு அங்கீகாரம் மற்றும் முகவரிக்காக தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் .
இரண்டு வருடமாக எழுதுகிறேன், 12 கதைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன்.
இரண்டு கதைகள் ஒருங்கிணைந்த ஒரு புத்தகமாக மெளனகாதல், மற்றும்
என்னுள் கலந்தவள் என இரண்டு புத்தகங்கள் ஒரு தனியார் வெப்சைட் மூலமாக புத்தமாக போட்டுள்ளேன்.
மீதி கதைகள் பிரதிலிபியில் உள்ளது.
எனது கனவு ,எனது புத்தகங்களை என்று நான் புத்தக கண்காட்சியில் பார்ப்பேன் என்பதுதான்.
எனது கதைகள் இயல்பாகவும், அதோடு சமூகத்தில் நடக்கும் முரண்களை முன்னிருத்தி இருக்கும்.
இப்போது தான் கமர்ஷியலா எழுத ஆரம்பித்திருக்கிறேன்😀😀😀😀
அவ்வளவு தான் நான், எனக்கு உங்களது ஊக்கமளிப்பு மிகவும் அவசியம். அதை தருவீர்கள் என நம்புகிறேன் 😊😊😊
நட்புடன்
💙 நாகா 💙