லீலா சந்திரன்
Moderator
பாகம்.. 1
விமானம் சென்னை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆக.. பூமிநாதன் @ பூமி..ஐந்து வருடம் கழித்து அன்று தான் துபாயில் இருந்து தன் தாய் நாட்டிற்கு வந்தான்.
தன் அம்மாவின் மறைவுக்கு பின்பு இந்த ஊரில் அவனுக்கு தன் அப்பா சந்திரனை தவிர வேறு எந்த சொந்தமும் இல்லை ..ஆகையால் தான் அவன் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி அவன் வெளிநாட்டுக்கு பயணம் கொண்டான்...
தன் தந்தையை எவ்வளவு முறை அழைத்தும் அவர் அவனிடம் வர மறுத்ததால் இவன் வேறு வழி இன்றி தான் தந்தையின் கடைசி காலத்தில அவருடன் இருக்க வேண்டும் என்று எண்ணி அவனின் ஊருக்கு திரும்பினான்..
பூமியின் ஊர் ஒரு கிராமம் தான்..
எனினும் அங்கே எல்லா வசதியும் இருக்கும் ...ஆகையால் தன் தந்தைக்கு அவன் எல்லா தேவைக்க்களையும் ஏற்பாடு செய்து தந்து இருந்தான்.. ..இத்தனை வருடம் கழித்து தன் மகனின் வருகையை கண்டு சந்திரனின் மனம் ஆனந்தத்தில் அகம் மகிழ்ந்தது ...
"வா பா பூமி எப்படி பா இருக்குற, இப்ப தான் இந்த அப்பாவை பார்க்க உனக்கு நேரம் கிடைச்சுதா"..என்று சந்திரன் கண்கள் கலங்கி கேட்டதும் அவன் அவரை கட்டி அனைத்தவன்..
"ஏன் பா அப்படி பேசுறீங்க,நான் எங்க இருந்தாலும் உங்க பிள்ளை தான் அப்பா ...எனக்கு மட்டும் என்ன உங்களை பிரிந்து இருக்கணும்னு ஆசையா சொல்லுங்க"..என்று சந்திரனை இவன் கட்டி கொண்டான்
"சரி சரி நீ களைப்பா வந்து இருப்ப, வா பா உள்ள வா"..என்று பூமியை இவர் அழைத்ததும், இவன் வீட்டுக்குள் செல்ல,அவன் கண்களில் முதலில் தென்பட்டது தன் அம்மாவின் புகை படம் தான்.... சின்ன மாடத்தில் தன் தாயின் புகை படத்தின் அருகில் விளக்கு ஏற்றப்பட்டு ஊது வத்தியின் வாசனை அவன் மூச்சில் கலந்திட, தன் தாயின் நினைவுகளை தட்டி எழுப்பியது ....
பூமியின் அம்மாவுக்கு நடுத்தர வயது தான்.. இருப்பினும் நோய் வாய்ப்பட்டு இறந்த அவரின் மறைவை இன்றளவும் இவனால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தான் அவன் இருந்தான் ..
பூமியின் கண்கள் கலங்கி நின்று இருப்பவன் அருகில் வந்த சந்திரன் அவனை கட்டி அணைத்தபடி
"அம்மா எங்கேயும் போகல பா இங்க தான் இருக்காள் ..நீ போ போய் குளிச்சுட்டு வா சேர்ந்தே சாப்பிடலாம் அப்பா உனக்கு பிடிச்ச கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் மாங்காய் போட்டு வச்சி இருக்கேன்,கூடவே உனக்காக கொத்தரங்கை வத்தாலும் இருக்கு"
என்று சந்திரன் சொன்னதும் அவன் அவரை பார்த்து புன்னகையை சிதறவிட்டபடி குளியல் அறைக்கு சென்றவன் குளித்து முடித்து தன் அம்மாவின் புகை படத்திற்கு முன்பு கண்கள் மூடி அவரை வேண்டி கொண்டு மீண்டும் சமையல் அறைக்கு செல்ல
"வா பா சாப்பிடலாம்".. என்று தன் தந்தை அழைத்ததும் அவன் அவர் அருகில் அமர்ந்தவன்
"நீங்களே ஊட்டி விடுங்க பா".. என்று ஆ காட்டியதும்
சந்திரன் சந்தோஷத்துடன் மகனுக்கு உணவை ஊட்டி விட
இவனும் பதிலுக்கு தன் தந்தைக்கு ஊட்டி விட ..இந்த நிகழ்வை புகை படத்தில் இருந்தபடி பூமி நாதனின் அம்மா ஜெயா பார்த்து கொண்டு இருக்கிறாள் என்பதை அவர்கள் நம்பினார்கள்...
இருவரும் சாப்பிட்டு முடிக்க
"சரி பா நீ போய் ரெஸ்ட் எடு...இன்னைக்கு சாய்ங்காலம் நம்ம பக்கத்து ஊருக்கு போகணும்" என்று சந்திரன் சொல்ல.. பூமி அவரை கேள்வியோடு பார்க்க
"உனக்கு என் friend ராஜனின் மகள் பூங்குழலியை பெண் கேட்கலாம்னு இருக்கேன்"..
என்றதும் பூமிக்கு சற்று எரிச்சலாக இருந்தது ..அவன் முகம் வாடியதை பார்த்து சந்திரன் அவன் தோள் மீது கை வைத்தவர்..
"என்ன பா என்னாச்சு" என்று கேள்வி கேட்டதும்...
"இல்ல பா.. இப்போ தான் நம்ம நாட்டுக்கு வந்து இருக்கேன்..அந்த வெளிநாட்டுல இயந்திர வாழ்க்கை என்னோட வாழ்க்கையை வாழ எனக்கு நேரமே இல்ல ..ஏதோ இப்போ தான் நம்ம நாட்டுக்கு வந்து நிம்மதியா மூச்சு விடுற மாதிரி இருக்கு.. அதுக்குள்ள கல்யாணம் காட்சின்னு மூச்சு முட்ட வைக்காதிங்க"..
என்று பூமி சொன்னதும் சந்திரன் சிரித்துக்கொண்டே
"நீ இனியாவது சந்தோஷமா வாழணும்னு தான் பா உனக்கு நான் கல்யாண ஏற்பாடு பண்ண போறேன்.. நீ என்கூட வந்து பெண்ணை பாரு.. உனக்கு பிடிச்சா தான் கல்யாணம்.. இல்லையா கொஞ்ச நாள் போகட்டும்".. என்று கெஞ்சும் தோரணையில் தன் தகப்பன் பேசுவதை மறுக்க முடியாத பூமி.. அவர் அழைப்புக்கு மதிப்பு தந்து அன்றைய தினம் மாலை நேரம் பக்கத்து ஊரில் இருக்கும் சந்திரனின் நண்பன் ராஜன் வீட்டுக்கு செல்ல ..
"வாங்க வாங்க உள்ள வாங்க....வா டா சந்திரா"... என்று ராஜன் உரிமையோடு உள்ள அழைக்க ... ராஜனின் வீடு முழுதும் பூக்களால் அழகாக அலங்கரிக்க பட்டு இருந்தது...வாசலில் பெரிய கோலத்தில் நல் வருகை என்று எழுதி இருந்தது ...பூமியை பார்த்ததும் அங்கே இருந்த எட்டு வயது சிறுமி ஒருவள் ஒரு அறைக்குள் ஓடி போய் டீச்சர் மாப்பிளை சார் வந்துட்டாரு.. என கொஞ்சும் தமிழ் பேசும் குரலை கேட்டபடி பூமியும் அவன் அப்பா சந்திரனும் உள்ளே நுழைய
"உக்காருங்க மாப்பிள்ளை ஊர் பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது" என்று ராஜன் உரிமையாக பூமியை வினவினார்
"என்னடா பூமி அப்படி பாக்குற...உன்னை அவன் பெண்ணுக்கு இவன் கட்டலைனாலும் இவன் உன்னை மாப்பிள்ளைன்னு தான் கூப்பிடுவான்... ஏன்னா உன் அம்மா இவனுக்கு தங்கச்சி மாதிரி"..என்று சந்திரன் சொன்னதும் பூமியின் இதழோரத்தில் புன்னகை மலர்ந்தபடி அந்த வீட்டை நோட்டமிட..அந்த வீட்டின் வலது பக்கத்தல் பட்ட படிப்பு முடித்ததும் தோழிகளுடன் சேர்ந்து எடுக்க பட்ட புகை படம் இருந்தது.. இவனை அறியாமல் இதில் இவன் பார்க்க வந்த பெண் யார் என்று மனசு கேள்வி கேட்க.. அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடுமே என்று அவன் மூளை பதில் சொன்னது
"சரி சரி சீக்கிரம் என் மருமகளை வர சொல்லுங்க "என்று சந்திரன் சொன்னதும் .......
மஞ்சள் நிற சீலையில் பச்சை நிற கரையில் பட்டு புடவையும் அதற்கு பொருத்தமான ரவிக்கையில் கையில் காபி தட்டுடன் பூமியின் முன் வந்து நின்றாள் பூங்குழலி.....அவளை பார்த்தும் மீண்டும் திரும்பி பார்க்க தோன்றும் அழகுக்கு சொந்தக்காரி ....அளவான நெற்றி, கூர்மையான மூக்கு,ஆர்ப்பரிக்கும் கண்கள்,பாதி கோவை பழத்தின் மிஞ்சிய அளவில் இதழ்கள் என்று கவிதையாக தெரிந்த பூங்குழலியை பார்த்ததுமே
பூமிக்கு மிகவும் பிடித்து போனது
ஆனால் அவளுக்கு இவனை பிடிக்குமா என்று வரும் பாகத்தில் பார்ப்போம்..
தொடரும்....நன்றி.....
Last edited: