அத்தியாயம் - 1
இரவு நேர வானில் கார் முகில்களில் ஆட்சி கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்க இருள் என்பது எப்பொழுதும் நிரந்தரமில்ல நண்பா எனும் விதத்தில் இருளை பிளந்து தன் ஆக்கிரமிப்பை நிலை நாட்ட முகில்களின் பின் மறைந்து கிடந்த நிலமகள் நாணம் விலக்கி வெளிவந்து வெகுபிரகாஷமாய் பூமியை எட்டிப்பார்த்தாள்.
ஆள் நடமாட்டமில்லா சாலையில் நிலவிய நிச்சப்தத்தை கிழித்துக் கொண்டு பறந்தது அந்த கருப்பு நிற கார்..
வீதியில் விழிகளை பதித்து அதிவேகமாய் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவன் பார்வையை அவன் அலைபேசி சிணுங்கி திசை திரும்பச் செய்தது.
அழைப்பை ஏற்றவன் எதிர்புறமிருந்தவள் பேசமுன் முந்திக்கொண்டு,"ஓ தியா இன்னும் பைவ் மினிட்ஸ் டா, ஓவர் ட்ராபிக் ஜாம் அதான் ரொம்ப லேட் ஆவிடுச்சு.. இன்னும் பைவ் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.." என்று படபடத்தவாறு தன் காதில் அணிந்திருந்த காதணியை ஓர் முறை வருடி சரி செய்து கொண்டான் அஷ்வஜித்.
அனைவர் மனதையும் ஈர்க்கச் செய்யும் அவன் நாமத்தை போல் அவன் கம்பிரமான தோற்றமும் அனைவரையும் ஈர்க்கச் செய்யும்..
"என்ன அஷ்வந்த் நீ, இன்னிக்கு எனக்கு எவ்வளவு முக்கியமான நாள்ன்னு உனக்கே தெரியும், ஆனா இப்போ என் முகத்துல கொஞ்சமாச்சும் சந்தோசம் கிடையாது, உன்ன பார்க்காம எப்படி நான் சந்தோசமா இருப்பேன் சொல்லு.. எவ்வளவு நேரமா என்னைய காக்க வைக்குற தெரியுமா.. பார்ட்டிக்கு வந்திருக்கிறவங்களோட கூட நான் இன்னும் சரியா பேசல உனக்காக தான் இவ்வளவு நேரமா வாசல்லயே காத்துட்டிருக்கேன்.. ஆனா நீ இன்னும் வரல்ல.. உனக்கு நான் அவ்வளவு முக்கியமில்லாம போய்ட்டேன்ல" என எதிர்புறத்திலிருந்து ஏக்கம் ததும்ப படபடத்துக் கொண்டே போனாள் அவன் காதலி தியா.
இருவருக்குள்ளும் ஒரு வருட பழக்கமே.. அவன் அலுவலகத்திலேயே தியா வேலை பார்க்கிறாள்.. ஆரம்பத்தில் அலுவலகத்தில் சாதாரணமாய் வேலை பார்க்கும் மற்றைய ஊழியர்கள் போலவே அவளும் அவன் கண்களுக்குப் புலப்பட்டாள், ஆனால் விதியின் விந்தையால் அவனுக்கு ஏற்படவிருந்த பெரிய விபத்திலிருந்து அவள் அவன் உயிரை காப்பாற்றி பாதுகாத்ததால் அஷ்வந்தின் பார்வையில் அவளுக்காய் ஓர் தனியிடம் உருவானது..
ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாகவே பழகத்துவங்கினர், அது காலப்போக்கில் காதலாய் உருவெடுத்து விட்டது. அஷ்வந்த் தன் காதலை கூறிய அன்றிலிருந்து தியா அஷ்வந்தின் காதலியாய் அவன் சுற்று வட்டாரத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறாள்.
"என்ன தியா நீ, நான் என்ன வோன்டட்டாவா லேட் பண்றேன், சாய்ங்காலமே வரலாம்னு தான் இருந்தேன் ஆனா எதிர்பாரா விதமா திடீர்னு ஒரு கலய்ண்ட் வந்துட்டாங்க.. அவங்க கூட மீடிங் எரேஞ் பண்ணி அத முடிக்குறதுகுள்ள லேட் ஆவிடிச்சு.. ரொம்ப முக்கியமான க்லய்ண்ட், இடைல விட்டுட்டு வர முடியாதுல்ல அதான் நானே மீடிங்க அடண் பண்ணேன்... அதுல ட்ரேபிக் ஜாம் வேற, அதான் இன்னும் லேட் ஆவிடுச்சு.. நீயே சொல்லு இதுல என் தப்பு என்ன இருக்கு, சொன்னா நீ புரிஞ்சிப்பன்னு நினச்சேன், ஆனா நீ என்னன்னா நான் வேணும்னே இன்னிக்குன்னு பார்த்து உன்ன வேணும்னே காக்க வைக்குற போலல்ல பேசுற" என்றான் உண்மை நிலையை எடுத்துக் கூறி..
அவன் கூறிய விதத்தில் அவள் சட்டென "எனக்கு தெரியும் அஷ்வந்த் நீ எப்போவும் என்ன காக்க வைக்க மாட்டன்னு ஆனா எனக்குதான் உன்ன பார்க்குற வர நார்மலா இருக்க முடியல.. சீக்கிரம் வா அஷ்வந்த், ஐ அம் வைட்டிங் போர் யூ.." குழைந்த குரலில் கொஞ்சலாய் கூற,"இதோ பக்கத்துல தான் இருக்கேன் நீ போய் பார்ட்டிய அடன் பண்ணு நான் வந்துடுறேன்" என்றவன் பாதையிலிருந்த தன் பார்வையை விலக்கி தனது மொபைலை எடுத்து அழைப்பை துண்டித்து விட்டு பார்வையை முன்னே செலுத்தியவன் விழிகள் ஏகத்திற்கு விரிந்து
கொண்டது.
திடீரென்று எங்கிருந்தோ ஓர் பெண் பின்னே பார்த்த வண்ணம் அவன் வண்டியை கவனிக்காது ஓட வர, அவள் பார்வை எதர்ச்சியாய் முன்னே வந்த வண்டியை தொட்டுச் செல்ல, அவள் சுதாகரிக்கும் முன் சடுதியில் அப்பெண் மீது சீறிப் பாய்ந்திருந்தது அவன் வண்டி..
அவள் தன் வண்டியை நோக்கி ஓடி வருவதை கண்ட அஷ்வந்த் சுதாகரித்து வண்டியை நிறுத்தும் முன் அவன் கட்டுப்பாட்டை மீறி அவன் வண்டி அப்பெண் மீது மோதியிருந்தது.
இதை சிறிதும் எதிர்பார்க்காதவன் "ஏய்.. " எனும் பெரும் குரலில் கத்தியவாறு சடாரென பிரேக்கை அழுத்தி வண்டியை நிறுத்தினான். ஆனால் கால தாமதம் முன்னமே அவன் வண்டி அவளை இடித்துத் தள்ளியிருந்தது..
சட்டென கதவை திறந்து இறங்கிப் பார்க்க அப்பெண் நிலத்தில் குப்புற வீழ்ந்து இரத்த வெள்ளமாய் கிடந்தாள்.. வண்டி மோதிய வேகத்தில் தலை சென்று வண்டியில் முன்புறம் வேகமாய் மோதியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குருதி பெருக்கெடுத்து வெளியே பாய்ந்துவடிந்துக் கொண்டிருந்தது.
"ஓ சிட்" தன் மடைத்தனத்தை எண்ணி தலை அழுத்தக் கோதிக் கொண்டவன், தனக்கு தான் மீதே பலத்த கோபம் உண்டாக கை முஷ்டியை இறுக்கி காரின் முன்புறம் தாக்கி தன் அடங்கா கோபத்தை வெளிப்படுத்தினான்..
என்ன செய்வதென்று அவனுக்கு சரியா புரியவில்லை.. இதயம் படபடக்க எதையும் யோசிக்காது அவளருகே ஓடிச்சென்று மண்டியிட்டு அமர்ந்தவன் மறுபுறம் வீழ்ந்து கிடந்தவளை முன்புறம் சரிந்து அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முயல அவளோ எந்த வித அசைவுமின்றி கண்கள் சொருகி சுயநினைவை இழந்துக் கிடந்தாள்..
அவள் வதனமெங்கும் ஆங்காங்கே இரத்தச் சொட்டுக்கள் படித்து அவள் யாரென்று அடையாளம் காணமுடியாதளவு அவள் வதனத்தை மறைத்திருந்தது..
சிறு படபடப்புடன் மெல்ல அவள் நாசியினருகே தன் ஆள்காட்டி விரலை கொண்டு சென்று மூச்சிருக்கிறதா என ஆராய அவள் உஷ்ன மூச்சுக்காற்று படுவேகமாய் அவன் விரலை நொடிக்கொரு முறை தாக்கிச் சென்றது.. அவளுக்கு மூச்சிருக்கிறது என்பதை அறிந்தவுடனேயே அவன் மூச்சுக் காற்று சீராய் வெளியேறியது.. இருந்தும் அவள் நிலை மோசம் என துடிக்கும் அவள் இதயத்துடிப்பின் அசைவே அவனிற்கு சுட்டிக்காட்டியது..
நடந்தது நடந்து விட்டது அவளுக்கு என்ன ஆனால் எனக்கு என்ன என்று அவ்விடமே அவளை விட்டு விட்டுக் கடந்து செல்லுமளவு அவனொன்றும் கல் நெஞ்சம் படைத்தவனல்லவே..
இன்னும் தாமதமித்தால் வெளியேறும் இரத்தப்போக்கு மேலும் அதிகரித்து அவளுலுயிரிற்க்கே ஆபத்தாகிவிடும் என்று மூளை எடுத்துரைக்க நொடியும் தாமதிக்காது அவளை தன் கையில் ஏந்தியவன் அவளை வண்டியில் கிடத்தி வைத்தியசாலையை நோக்கி விரைந்தான்..
அஷ்வஜித்தின் வண்டி காற்றை கிழித்துக் கொண்டு வைத்தியசாலையின் முன் நிற்க அவசரமாய் வண்டியை விட்டு இறங்கியவன் நொடியும் தாமதிக்காது சுயநினைவின்றி கிடந்தவளை கையில் ஏந்தி கொண்டு ஒட்டமும் நடையுமாய் வைத்தியசாலைக்குள் நுழைந்தான்.
அங்கிருந்த நர்ஸ் இருவரைப் பார்த்து "சீக்கிரம் இந்த பொண்ணுக்கு டிரீக்மன்ட் பண்ணனும், ரொம்ப பிளீடிங் ஆவுது.. இமீடியட்டா டாக்டர்ர கூப்பிடுங்க.." என்று கத்தி உத்தரவு பிறப்பிக்க அவர்களோ அவ்விடம் விட்டு நகராது சட்டை முழுக்க இரத்தம் படிந்திருந்தவனையும் அவன் கையில் துவழ்ந்து கிடந்தளையும் ஆராய்ச்சிப் பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தனர்..
அவ்விடமிருந்த பெரிய வைத்தியர்களின் உதவிவைத்தியனொருவன் அஷ்வஜித் கையிலிருந்தவளை பார்வையால் அளந்தவாரே, "சார் இவங்களுக்கு ஏற்பட்டிருக்க பாதிப்ப வெச்சி பார்க்கும் போது இது அக்சிடன்ஸ் கேஸ் போலதான் இருக்கு, உடனே எல்லாம் டிரீக்மன்ட் ஸ்டார் பண்ண முடியாது சார்.. முதல்ல போலீஸ்க்கு இன்போர்ம் பண்ணனும்,அவங்க வந்த புறம் தான் டிரீக்மன்ட் பண்ணனும், இல்லன்னா எங்க ஹாஸ்பிடலுக்கு தான் பிரச்சன வரும்" என்க அஷ்வந்த் அவனை வெறியேற முறைத்தான்.
"யூ டு வாட் ஐ சே.. கொஞ்சமாச்சும் ஹியூமன் சென்ஸ்சிருக்கா உனக்கு, ஒரு டாக்டரா இருந்துகிட்டு ஒருத்தர் உயிருக்கு போராடிட்டிருக்கும் போது இப்படி சாதாரணமா ரூல்ஸ் பேசுற.. நீ சொல்ற போல ரூல்ஸ் பொ(f)லொவ் பண்ணா இந்த பொண்ணு செத்ததுக்கு அப்புறம் தான் டிரீக்மன்ட் பண்ணவேண்டியிருக்கும்.. இடியட்.. " பல்லை கடித்து அவனை கோபமாய் திட்ட, அவனோ அவன் கோபத்தின் சிவந்து கிடந்த வதனத்தை கண்டு மிரண்டு எதுவும் பேச முடியாது தலையை குனித்துக் கொண்டான்.
"கால் மீ டாக்டர் தேவ்" கணீர் குரலில் அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு நர்ஸ்சை பார்த்து கூற அவள் திடுக்கிட்டு நாளா புறமும் தலையை ஆட்டிவிட்டு வைத்தியர் தேவ்வை அழைக்க விரைந்து சென்றாள்.
அடுத்த நிமிடம் நர்ஸ் சொன்னதை வைத்து என்னவோ ஏதோ என அவ்விடம் விரைந்து வந்த தேவ் அஷ்வஜித்தை கண்டவுடன் "டேய் என்னடா ஆச்சு, எதுக்கு கத்திட்டிருக்க.." என்று ஓர் அண்ணனாய் தன் தம்பியின் சட்டை,கைகளில் படிந்திருந்த இரத்தத்தை பார்த்து பதைபதைத்தவன் அவன் கையில் துவண்டுக் கிடந்தவளை கண்டு நெற்றி சுறுக்கி யோசனையாய் தன் தம்பியின் முகத்தை ஏறிட்டான்.
"எனக்கு எதுவும் கிடையாது.. இப்போ இதெல்லாம் விளக்க நேரம் கிடையாது, முதல்ல இந்த பொண்ணுக்கு டிரீக்மண்ட் பண்ணு ரொம்ப பிளீடிங் ஆவுது.." என்று அவசரப்படுத்த,
நிலைமையை புரிந்து கொண்ட தேவ் "தீபக் ஸ்டஷ்சர் கொண்டு வா.. நர்ஸ் சீக்கிரம் ஆபரேஷனுக்கு ரெடி பண்ணுங்க " என்று விரைவுப்படுத்தி சக ஊழியர்களிடன் கட்டளை பிறப்பிக்க, நர்ஸ் இருவர் ஊழியர்களின் உதவியுடன் அவளை ஸ்டஷ்சரில் கிடத்தி உடனே அவசர பிரிவிற்குள் அழைத்துச் சென்றனர்.
அஷ்வஜித் அவசரப்பிரிவின் அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் தொப்பென அமர்ந்தான். இருகைகளைக் கொண்டு முகத்தை அழுத்தத் துடைத்துக் கொண்டான்..
ஏன் இவ்வளவு பதைபதைப்பு?, என்னவாயினும் தன் கவனயீனத்தால் நிகழ்ந்த விபத்தாயிற்றே அதனால் தான் என்று தன் மனம் எழுப்பிய கேள்விக்கு ஆராய்ச்சியின்றி நேரடியாகவே பதிலை கொடுத்துக் கொண்டான்..
சில மணிநேரம் கடந்து செல்ல கதவு திறப்படும் சத்தத்தில் பார்வையை அப்புறம் திருப்ப, அவசர பிரிவிலிருந்து வெளியே வந்தான் தேவ்..
எழுந்து அவனருகே சென்றவன் "என்னாச்சு எவ்ரிதிங் ஆல் ரைட் தானே.." என்று வினவ, அவனோ "இல்ல ரொம்ப கிரிடிகல் ஸ்டேஜ்ல இருக்கா.. ரொம்ப பிளட் லாஸ் ஆவிருக்கு இமீடியட்டா பிளட் தேவ படுது.. அந்த பொண்ணோட அம்மா,அப்பா யாருக்காச்சும் இன்போர்ம் பண்ணி சீக்கிரம் வர சொல்லு, இப்போவே அவசரமா பிளட் ஏத்தியாகனும்..." என்று கூறவும் ஒற்றை விரல் கொண்டு நெற்றியை யோசனையுடன் நீவினான் அஷ்வஜித்.
"என்ன யோசிக்கிற அஷ்வந்த் இது யோசிக்கிற நேரம் கிடையாது சீக்கிரம்.." தேவ் பெண்ணவள் நிலை கருதி அவசரப்படுத்தினான்.
"அது முடியாது தேவ்.. ஏன்னா எனக்கு அந்த பொண்ணு யாருன்னே கூட சரியா தெரியாது.. " என்று நடந்ததை கூறி "நான் நோட் பண்ண படி அவகிட்ட போன்,ஐ டி அப்படி எந்த திங்ஸ்சும் கிடையாது, அவ சொன்னாலேயன்றி எந்த டீடெயில்ஸ்சும் தெரிஞ்சிக்க இல்ல.. ஏன் அவ முகத்த கூட நான் சரியா கவனிக்கல" என்று அவன் மேலும் தோலைக் குலுக்கி கூறவும், தேவ் அவனை தீயாய் முறைத்தான்.
"கொஞ்சமாச்சும் அறிவிருக்கா அஷ்வந்த் உனக்கு.. இப்படிதான் கவவனயீனமா இருப்பியா, நீ பண்ண வேலயால இப்போ அந்த பொண்ணு உயிரு ஆபத்துல இருக்கு.. இப்போ என்ன பண்ண போற?,அந்த பொண்ணு பிளட் கூட ரொம்ப ரேர்ரானது,பொம்பாய் பிளட் குரூப்டா அந்த பொண்ணுடையது.. இங்க ப்ளட் பேங்க்குல கூட அந்த பிளட் கிடையாது ரொம்ப ரேர்ரானது, இந்தியாலையே 176 பேர் தான்டா அந்த பிளட் குரூப் இருக்காங்க" என்று தீவிரமாய் கூற தலையில் கையை வைத்தான்..
[*ஆம் நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய விடயமே.. ஒட்டு மொத்த இந்தியாவிலும் காணப்படும் அரிதான இரத்தப்பிரிவு என்றால் அது பொம்பாய் இரத்தப்பிரவேயாகும் ]
தேவ் அவள் இரத்தப்பிரிவின் பெயரை சொன்னதும் விலுக்கென நிமிர்ந்துப் பார்த்தான் அஷ்வஜித் "நான் பிளட் தரேன்.." என்றான்.
"டேய் நீ எப்படி..." சட்டென மறுக்க வந்த தேவ் ஏதோ துணுக்குற்றவனாய் "ஓ கோட், உன்னோட பிளட் குரூப்பும் அதான்ல, இத எப்படி மறந்தேன்.." என்று தன்னை நொந்து கொண்டவன் அடுத்த கட்டமாய் உடனடியா அஷ்வஜித்தை அழைத்துச் சென்று அவனிடமிருந்து இரத்தத்தை பெற்றுக்கொண்டு அவ்விரத்தத்தை பெண்ணவள் உடலுக்கு ஏற்றி, மேற்படி செய்ய வேண்டிய தேவையான சிகிச்சையை மேற்கொண்டனர்..
அஷ்வஜித் அவளுக்கு இரத்தம் கொடுத்த களைப்பில் உடல் அயதியால் அமர்ந்திருந்த இருக்கையிலேயே தலை சாய்த்து தன்னையறியாது கண்ணயர்ந்து போனான்..
தொடரும்..
#அஸ்திரம் - 54