Brammastram Writers
Moderator
அழகிய காதல் நிலவே
ஹாய் பிரெண்ட்ஸ்,
இதோ அடுத்த அத்தியாயம் 15 போட வந்துடேன்.
போன யூடிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மக்கா….மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு பொங்க… யாரையாவது டாக் பண்ணனுமா அதையும் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.
நிலா 15:
அதிகாலையில் விழித்த அஷ்மிதா தனது அன்றாட பணியை எப்பொழுதும் போல செய்து முடித்திருந்தாள்.
தனக்கு சாப்பாடு கட்டி கொண்டவள் தன் மகனிற்கும் சேர்த்து அவனிர்க்குறிய பையில் எடுத்து வைத்தவள் அவனை எழுப்புவதற்காக சென்றாள்.
ஆழ்ந்த நித்திரையில் இருந்த தன் மகனை ரசித்தவள். முதலில் அறையை ஒழுங்கு செய்ய துவங்கினாள்.
அப்பொழுது ஏதோ ஒலி தன் சேவியை அடைய ஒலி வந்த திசையில் தன் காதுகளை கூர்மையாக்கி கேட்டாள்.
அந்த ஒலி தன் மகனுடையது என்றதும் புருவம் முடிச்சிட அருகே சென்று பார்த்தாள். குழந்தையின் கண்கள் திறக்கவே இல்லை.
அது தனது பிரம்மை என்று திரும்ப எத்தனித்த நேரத்தில் மீண்டும் குழந்தையின் குரல் கேட்க தன் சேவியை குழந்தையின் வாய் அருகே கொண்டு சென்றாள்.
"காதுல போனும் தாதி குதித்து போ பிச்" என்று குழந்தை கெஞ்சுவது போல பேசுவது அவள் காதுகளில் விழ அவனின் "தாதி" என்ற வார்த்தை அவளை உறைய வைத்தது.
தான் குழந்தையை பெற்று வளர்த்த இந்த நான்கு ஆண்டுகளில் அவன் இவ்வாறு ஏங்கியது இதுவே முதல் முறை. என்ன நடந்திருக்கும் என்று அவளால் உகிக்க முடிய வில்லை.
இருந்தும் வேலைக்கு நேரமாவது புரிய இந்த விடயத்தை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டாள் குழந்தையை பள்ளிக்கு தயார் செய்தாள்.
குழந்தையை தான் வேலை பார்க்கும் அதே பள்ளியில் விளையாட்டு முறையில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் மழலையர் பிரிவில் விட்டு விட்டு குழந்தையின் ஆசிரியரிடம் வந்தாள்.
"மேம் நேத்து யாராவது ருத்ரா கிட்ட அவனோட அப்பாவை பத்தி பேசுனாங்களா" என்று கேட்க.
"இல்லையே மேம் அப்படி பேசவும் வாய்ப்பு இல்லயே" என்று யோசித்தவர். பின்பு ஏதோ நியாபாகம் வந்தவராக "நேத்து திடீர்னு மீட்டிங்னு சொல்லிட்டாங்க அதுனால ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளிய போய் வேற ஒரு ஸ்டாஃப் கூப்பிட போனேன். ஒரு வேளை அந்த கேப்ல யாரும் பேசிருபாங்களோ" என்று யோசிக்க.
அவர் கூறியதை கேட்டவள் "ஹோ அப்படியா மேம் இட்ஸ் ஓகே. நோ பிராப்ளம் நான் பாத்துக்கிறேன் சாரி மேம் டிஸ்ட்ரப் பண்ணிட்டேன்" என்றுவிட்டு தன் மகனுக்கு கை அசைத்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
அவள் யோசனையுடன் வெளியே வர எதிரே வந்த நபரை கவனிக்க தவறினாள்.
கவனிக்க தவறியதாள் எதிரே வந்தவன் மீது மோதி கீழே விழ இருந்த சமயம் அவளை தாங்கினான் அவன்.
அதில் சற்று தடுமாறி அதிர்ந்து தெளிந்தவள் தன்னை தாங்கியவனை கண்டதும் கோவம் கொப்பளித்ததுடன் உடல் கொதிக்கும் எண்ணெயை தன் மேல் உற்றியதை போல பற்றி எரிந்தது.
இருக்கும் இடம் பொருட்டு தன் கோவத்தை அடக்கியவள் வலுக்கட்டாயமாக தன் உதடை இழுத்து பிடித்து சிரித்தவள். நன்றி கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.
இங்கு நடப்பதை தூரம் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாமல் நடந்தவை போன்றே தெரியாது அபத்தமாகவே தெரியும்.
அதை போன்று தான் தெரிந்தது அவனது கண்களுக்கும். ஆம், இந்த காட்சியை மறைகாணி (கண்கானிப்பு கருவி) வழியே தன் கணினியில் பார்த்து கொண்டிருந்தான் அனிஷ்.
அவனிற்கு கோவம் கரை புரண்டொட தனது அருகே இருந்த கண்ணாடி லோட்டவை (தம்ளர்) பிடித்திருந்தவனின் கோவம் முழுவதையும் அதில் காட்டினான்.
அவனின் சக்தி முன் துள் துளாக உடைந்து அவனது கையை பதம் பார்த்தது. கண்ணாடி உடைந்த சத்தத்தில் ஒரு சிறிய குறிப்பு சீட்டில் உள்ள தாளில் எதையோ கிறுக்கி கொண்டிருந்த அந்த சின்ன சிட்டு திரும்பி பார்த்து "தாதி என்ன ஆச்சி" என்று கேட்டு கொண்டே அவனருகே வர.
அதில் சுயத்திற்க்கு வந்தவன் அதை குழந்தைக்கு காட்டாமல் மறைத்திருந்தான்.
வீட்டில் அன்று நடந்த சம்பவத்திற்றுக்கு பின் அவன் யாரையும் நம்ப தயாராக இல்லை.
ஆகவே தன்னுடன் தன் செல்ல சிமாட்டியை அழைத்து வந்திருந்தான். மறைகாணி வழியாக நடப்பவற்றை பார்த்து கொண்டிருந்தவன் அனைத்தும் சரியாக சென்று கொண்டிருப்பதாக தோன்றியது. ஆதலால் அடுத்த திரையில் தன் கண்ணை பதிக்க அஷ்மிதா மழலையர் வகுப்பில் இருந்து வருவதை கண்டு அவளை பார்த்து கொண்டிருந்தவன் ஹேம்மந்த் மீது மோதியதை பார்த்து ஆத்திரம் அடைந்ததன் விளைவு கைகளில் காயம்.
அந்த கைகளுடன் தன் மகளை பார்த்து கொள்ள முடியாததால் அவளை மழலையர் வகுப்பில் விடுவத்தர்க்கு முடிவெடுத்தான்.
காரணம் கண்ணாடி துண்டு ஒன்று கையை நன்றாக பதம் பார்த்திருந்தது. அதனால் குருதி அதிகமாக வெளியேறி இருந்தது.
தன் கைகளை மகளிடம் இருந்து மறைத்தவாறு அஷ்மிதா தன் மகனை விட்டு சென்ற வகுப்பிற்கு அடுத்துள்ள வகுப்பறையில் அவந்திகாவை விட்டு விட்டு பார்த்து கொள்ளும் படி சொல்லிவிட்டுத் திரும்ப.
அங்கே ஒரு மரத்தடியில் குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன் மட்டும் அவர்களுடன் விளையாடாமல் கன்னத்தில் கை வைத்து சோகமாக அமர்திருக்க அக்காட்சியை கண்டவன் வெகு நாட்களுக்கு பிறகு தன்னை மறந்து சிரித்து விட்டான்.
ஒருவரின் சோகம் பிறருக்கு மகிழ்ச்சியை கொடுக்குமா என்றால் இதோ இக்காட்சியே அதற்கு சாட்சி.
ஏனெனில் தன்னவள் அவளது சோகத்திலும் அவனிற்கு மகிழ்ச்சி கொடுப்பவள் ஆயிற்றே. அவளும் ஏதேனும் வேண்டும் என்றால் இப்படி தானே அமர்திருப்பாள் என்று அவனது அனுமதி இல்லாமல் அவளின் நியாபகம் அவனை ஆக்கிரமித்தது.
இருந்தும் அதனை ஒதுக்கியவன் அச்சிறுவனை நோக்கி நடந்தான். அவன் அருகே செல்ல செல்ல அச்சிறுவனின் முகம் மிகவும் பரிட்சயமான முகமாக தோன்ற வேக எட்டு வைத்து அவனை அடைந்தான்.
முதலில் எவ்வாறு அச்சிறுவனின் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் யோசித்து கொண்டிருந்தவனின் கவனத்தை கலைத்தது ஒரு குரல்.
"எச்சுஸ்மி அங்கிள் கொஞ்சம் ஒதமா பொங்க எனக்கு மதைக்கு" என்று அவனிடம் பேச.
அதில் தலை அசைத்து சிரித்தவன் அவன் உயரத்திற்கு அமர்ந்து "இங்க இருந்து பாக்குறதுக்கு பதிலா அவங்க கூட போய் விளையாடலாம்ல" என்று கேட்க.
அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு "ஐயோ அங்கிள் நான் தான் அவங்க தெல்லாரு குதவும் டூ விட்டுட்டேன் இது குத தெய்யாதா" என்று தன் தலையில் அடித்தவாரு கூற.
அதை கேட்டு சத்தமாக சிரித்து விட்டான் அனிஷ். பின்பு "என் சண்ட போட்டிங்க. அவங்க என்ன சொன்னாங்க உன்ன பத்தி. யாரு கிட்டையும் சண்ட போட கூடாதுனு உங்களுக்கு தெரியாதா" என்று கேட்க.
அதற்க்கு அவனது மனசாட்சியோ "அதை நீ சொல்ல கூடாது ராசா" என்று கேலியாக சிரிக்க. அதை அவன் முறைத்த முறைப்பில் வாயை முடிகொண்டது.
"அங்கிள் அவங்க தெல்லாரும் என் தாதி பத்தி கேதாங்க எனக்கு தாதி தெய்யாதுல. பின்ன அவரை கேத்தா என்ன தொல்ல. அதோ இதுகான்ல மாது அவன் தாதி பெய்ய காது வச்சிருகாது என் அம்மா கித்த இல்லல அதான் கிந்தல் தெய்யுறான்" என்று தான் சண்டை இட்ட கதையை கூற.
அனிஷின் முகமோ யோசனையில் அவனது உரையாடலில் அவன் கூரிய "பெய்ய காது" என்ற வார்த்தையில் தேங்கி நின்றது.
பின்பு தான் புரிந்தது அது 'காது' அல்ல 'கார்' என்று. பின்பு அவன் கூரிய அம்மா அப்பா இல்லை என்ற வாக்கியத்தில் அவன் மனம் கனத்து போனது.
காரணம் அவன் அறிவானே தனி ஒரு மனிதனாக குழந்தையை வளர்ப்பது அவளவு எளிதான காரியம் அன்று.
இப்பொழுது அதிகரித்து வரும் விவாகரத்தும், சரியான புரிதல் இல்லாத உறவு முறையும், கோவம் எனும் அரக்கன் செய்யும் வேலைகளும் குடும்பத்தை சின்னா பின்னா மாக்குகிறதே.
அது மட்டுமா அதில் பெரிது பாதிக்க படுவது சிறியவர்களே. பெரியவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மட்டுமே பெரிதாக மதிகின்றனரே ஒழிய சிரியவர்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் கிச்சித்தும் நினைப்பதில்லை.
ஆணிற்க்கு குழந்தையை வளர்ப்பது மட்டுமே அவனை பொறுத்தவரை சவாலான விடயம்.
அதுவே பெண் என்றால் குழந்தையை சமாளிப்பதுடன் இந்த சமுதாயத்தின் எச்சுகளையும் பேச்சுக்களையும் தவறான பார்வையில் இருந்தும் தவறாக பார்ப்பவரிடம் இருந்தும் சமாளித்து வருவது சவாலிர்க்கும் மேலான விடயம்.
அதை அறிந்தவன் என்பதால் அக்குழந்தையின் தாயிற்காக வேதனை அடைந்ததுடன். அக்குழந்தையின் பால் அவனையும் அறியாமல் அன்பு உற்றெடுத்தது.
"அவ்வளவு தான என் கிட்ட அவன் அப்பா வச்சிருக்கிற கார விட பெரிய கார் இருக்கு வா நம்ம ஒரு ரவுண்ட் போகலாம்" என்று கூற.
"வெந்தாம் அங்கிள் தெய்யாதவங்க குபித்தா போக குதாதுனு அம்மா தொள்ளிருகாங்க" என்று கூற.
அவனது மனம் தன் மகளை நினைத்து கலங்கியது. நிகிதா எனும் அரக்கியை வெளி ஆலென்றும் பாராமல் தாயின் பாசத்திற்கு நெருங்க அவளை தள்ளி விட்டதை நினைத்து நரம்பு புடைத்தாலும் தாயின் வளர்ப்பு வேறு என்றே அவனது மனம் அடித்து கூறியது.
என்ன தான் தன் மகளிர்க்கு வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தும் பக்கத்தில் இருந்து அரவணைத்து அனைத்தையும் சொல்லி தர தாய் இல்லாததை நினைத்து கலங்கவே செய்தது.
தன் மகவை இப்படி தவிக்க விட்டு சென்றவள் மீது ஆத்திரம் கரை புரண்டோட. கையில் காயம் ஏற்பட்டதை மறந்து கை முஷ்டியை மடக்க அது தந்த வேதனையில் 'ஷ்ஷ்' என்று முனங்க.
அவனது முகம் வேதனையில் மாறுவதை கண்டு "அங்கிள் என்ன ஆச்சி" என்று அவனது கையை பிடித்து கேட்க.
அதில் இருந்த காயத்தை கண்டு "ஐயயோ நெத்தம்" என்று அலறியவன். பின்பு வேகமாக தன் அருகில் வைத்திருந்த தண்ணீர் குடுவையில் தனக்கென்று வைத்திருந்த தண்ணீரை அவனது கையில் உற்றி அதை கழுவ செய்தான்.
மீதம் இருந்த தண்ணீரை அவனை பருக செய்து அவனது தாய் அவனுக்கென்று எப்பொழுதும் கொடுத்தனுப்பும் முதலுதவி மருந்தை தனது கால் சட்டையில் இருந்து எடுத்து அவனிற்கு தடவியவன். தனது கைக்குட்டையை அந்த காயத்தின் மீது கட்டி விட்டான் அச்சிரிய மருத்துவன்.
"தோம்ப வலிக்குதா அங்கிள் சிக்கிதம் சதி ஆயிதும்" என்று அந்த காயத்தில் மீது உதடு குவித்து உத.
அதில் மென்னகை புரிந்தவன் "இதுலாம் உங்களுக்கு யாரு சொல்லி தந்தாங்க" என்று கேட்க.
"எங்க அம்மா தெப்பவும் நான் கிழ விதுந்து அழுவென் அதுனால இது தேப்பவும் உன் கித்த இதுகணும்னு அம்மா தந்தாங்க" என்று கூற.
"நல்ல விசயம் நிறைய சொல்லி தந்திருக்காங்க உங்க அம்மா. ஒரு காலத்துல எனக்கும் இப்படி தான் ஒரு ஜீவன் சொல்லி தருவா" என்று மனதினுள் புலம்பியவன்.
பெருமூச்சு ஒன்றை விட்டு "நீ எனக்கு இவ்வளவு ஹெல்ப் செஞ்சிருகல்ல சோ நான் உன்னை ஒரு ரவுண்ட் என் கார்ல குடிட்டு போறேன் அஷ் அ ஃப்ரெண்ட்டா ஓகே" என்று கேட்க.
ஏதோ அறிய வகை கண்டு பிடிப்பை கண்டு பிடிக்க போவதை போல விரலை தன் நாடியில் வைத்து யோசித்தவன். "ஓகே அங்கிள்" என்று தன் கட்டை விரலை காட்டினான்.
அவனை வாரி அனைத்து முத்தமிட்டு அவனது வகுப்பில் பொறுப்பில் இருக்கும் ஆசிரியரிடம் சொல்லி விட்டு அவனை அழைத்து சென்றான்.
அச்சிறுவனின் உண்மை கதை தெரிய வரும் போது என்னாகுமோ?
நிலா வருவாள்.
மறக்காம உங்க பொன்னான கருத்துகளை கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி சொல்லிருங்க ஃப்ரெண்ட்ஸ்…
ஹாய் பிரெண்ட்ஸ்,
இதோ அடுத்த அத்தியாயம் 15 போட வந்துடேன்.
போன யூடிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மக்கா….மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு பொங்க… யாரையாவது டாக் பண்ணனுமா அதையும் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.
நிலா 15:
அதிகாலையில் விழித்த அஷ்மிதா தனது அன்றாட பணியை எப்பொழுதும் போல செய்து முடித்திருந்தாள்.
தனக்கு சாப்பாடு கட்டி கொண்டவள் தன் மகனிற்கும் சேர்த்து அவனிர்க்குறிய பையில் எடுத்து வைத்தவள் அவனை எழுப்புவதற்காக சென்றாள்.
ஆழ்ந்த நித்திரையில் இருந்த தன் மகனை ரசித்தவள். முதலில் அறையை ஒழுங்கு செய்ய துவங்கினாள்.
அப்பொழுது ஏதோ ஒலி தன் சேவியை அடைய ஒலி வந்த திசையில் தன் காதுகளை கூர்மையாக்கி கேட்டாள்.
அந்த ஒலி தன் மகனுடையது என்றதும் புருவம் முடிச்சிட அருகே சென்று பார்த்தாள். குழந்தையின் கண்கள் திறக்கவே இல்லை.
அது தனது பிரம்மை என்று திரும்ப எத்தனித்த நேரத்தில் மீண்டும் குழந்தையின் குரல் கேட்க தன் சேவியை குழந்தையின் வாய் அருகே கொண்டு சென்றாள்.
"காதுல போனும் தாதி குதித்து போ பிச்" என்று குழந்தை கெஞ்சுவது போல பேசுவது அவள் காதுகளில் விழ அவனின் "தாதி" என்ற வார்த்தை அவளை உறைய வைத்தது.
தான் குழந்தையை பெற்று வளர்த்த இந்த நான்கு ஆண்டுகளில் அவன் இவ்வாறு ஏங்கியது இதுவே முதல் முறை. என்ன நடந்திருக்கும் என்று அவளால் உகிக்க முடிய வில்லை.
இருந்தும் வேலைக்கு நேரமாவது புரிய இந்த விடயத்தை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டாள் குழந்தையை பள்ளிக்கு தயார் செய்தாள்.
குழந்தையை தான் வேலை பார்க்கும் அதே பள்ளியில் விளையாட்டு முறையில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் மழலையர் பிரிவில் விட்டு விட்டு குழந்தையின் ஆசிரியரிடம் வந்தாள்.
"மேம் நேத்து யாராவது ருத்ரா கிட்ட அவனோட அப்பாவை பத்தி பேசுனாங்களா" என்று கேட்க.
"இல்லையே மேம் அப்படி பேசவும் வாய்ப்பு இல்லயே" என்று யோசித்தவர். பின்பு ஏதோ நியாபாகம் வந்தவராக "நேத்து திடீர்னு மீட்டிங்னு சொல்லிட்டாங்க அதுனால ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளிய போய் வேற ஒரு ஸ்டாஃப் கூப்பிட போனேன். ஒரு வேளை அந்த கேப்ல யாரும் பேசிருபாங்களோ" என்று யோசிக்க.
அவர் கூறியதை கேட்டவள் "ஹோ அப்படியா மேம் இட்ஸ் ஓகே. நோ பிராப்ளம் நான் பாத்துக்கிறேன் சாரி மேம் டிஸ்ட்ரப் பண்ணிட்டேன்" என்றுவிட்டு தன் மகனுக்கு கை அசைத்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
அவள் யோசனையுடன் வெளியே வர எதிரே வந்த நபரை கவனிக்க தவறினாள்.
கவனிக்க தவறியதாள் எதிரே வந்தவன் மீது மோதி கீழே விழ இருந்த சமயம் அவளை தாங்கினான் அவன்.
அதில் சற்று தடுமாறி அதிர்ந்து தெளிந்தவள் தன்னை தாங்கியவனை கண்டதும் கோவம் கொப்பளித்ததுடன் உடல் கொதிக்கும் எண்ணெயை தன் மேல் உற்றியதை போல பற்றி எரிந்தது.
இருக்கும் இடம் பொருட்டு தன் கோவத்தை அடக்கியவள் வலுக்கட்டாயமாக தன் உதடை இழுத்து பிடித்து சிரித்தவள். நன்றி கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.
இங்கு நடப்பதை தூரம் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாமல் நடந்தவை போன்றே தெரியாது அபத்தமாகவே தெரியும்.
அதை போன்று தான் தெரிந்தது அவனது கண்களுக்கும். ஆம், இந்த காட்சியை மறைகாணி (கண்கானிப்பு கருவி) வழியே தன் கணினியில் பார்த்து கொண்டிருந்தான் அனிஷ்.
அவனிற்கு கோவம் கரை புரண்டொட தனது அருகே இருந்த கண்ணாடி லோட்டவை (தம்ளர்) பிடித்திருந்தவனின் கோவம் முழுவதையும் அதில் காட்டினான்.
அவனின் சக்தி முன் துள் துளாக உடைந்து அவனது கையை பதம் பார்த்தது. கண்ணாடி உடைந்த சத்தத்தில் ஒரு சிறிய குறிப்பு சீட்டில் உள்ள தாளில் எதையோ கிறுக்கி கொண்டிருந்த அந்த சின்ன சிட்டு திரும்பி பார்த்து "தாதி என்ன ஆச்சி" என்று கேட்டு கொண்டே அவனருகே வர.
அதில் சுயத்திற்க்கு வந்தவன் அதை குழந்தைக்கு காட்டாமல் மறைத்திருந்தான்.
வீட்டில் அன்று நடந்த சம்பவத்திற்றுக்கு பின் அவன் யாரையும் நம்ப தயாராக இல்லை.
ஆகவே தன்னுடன் தன் செல்ல சிமாட்டியை அழைத்து வந்திருந்தான். மறைகாணி வழியாக நடப்பவற்றை பார்த்து கொண்டிருந்தவன் அனைத்தும் சரியாக சென்று கொண்டிருப்பதாக தோன்றியது. ஆதலால் அடுத்த திரையில் தன் கண்ணை பதிக்க அஷ்மிதா மழலையர் வகுப்பில் இருந்து வருவதை கண்டு அவளை பார்த்து கொண்டிருந்தவன் ஹேம்மந்த் மீது மோதியதை பார்த்து ஆத்திரம் அடைந்ததன் விளைவு கைகளில் காயம்.
அந்த கைகளுடன் தன் மகளை பார்த்து கொள்ள முடியாததால் அவளை மழலையர் வகுப்பில் விடுவத்தர்க்கு முடிவெடுத்தான்.
காரணம் கண்ணாடி துண்டு ஒன்று கையை நன்றாக பதம் பார்த்திருந்தது. அதனால் குருதி அதிகமாக வெளியேறி இருந்தது.
தன் கைகளை மகளிடம் இருந்து மறைத்தவாறு அஷ்மிதா தன் மகனை விட்டு சென்ற வகுப்பிற்கு அடுத்துள்ள வகுப்பறையில் அவந்திகாவை விட்டு விட்டு பார்த்து கொள்ளும் படி சொல்லிவிட்டுத் திரும்ப.
அங்கே ஒரு மரத்தடியில் குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன் மட்டும் அவர்களுடன் விளையாடாமல் கன்னத்தில் கை வைத்து சோகமாக அமர்திருக்க அக்காட்சியை கண்டவன் வெகு நாட்களுக்கு பிறகு தன்னை மறந்து சிரித்து விட்டான்.
ஒருவரின் சோகம் பிறருக்கு மகிழ்ச்சியை கொடுக்குமா என்றால் இதோ இக்காட்சியே அதற்கு சாட்சி.
ஏனெனில் தன்னவள் அவளது சோகத்திலும் அவனிற்கு மகிழ்ச்சி கொடுப்பவள் ஆயிற்றே. அவளும் ஏதேனும் வேண்டும் என்றால் இப்படி தானே அமர்திருப்பாள் என்று அவனது அனுமதி இல்லாமல் அவளின் நியாபகம் அவனை ஆக்கிரமித்தது.
இருந்தும் அதனை ஒதுக்கியவன் அச்சிறுவனை நோக்கி நடந்தான். அவன் அருகே செல்ல செல்ல அச்சிறுவனின் முகம் மிகவும் பரிட்சயமான முகமாக தோன்ற வேக எட்டு வைத்து அவனை அடைந்தான்.
முதலில் எவ்வாறு அச்சிறுவனின் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் யோசித்து கொண்டிருந்தவனின் கவனத்தை கலைத்தது ஒரு குரல்.
"எச்சுஸ்மி அங்கிள் கொஞ்சம் ஒதமா பொங்க எனக்கு மதைக்கு" என்று அவனிடம் பேச.
அதில் தலை அசைத்து சிரித்தவன் அவன் உயரத்திற்கு அமர்ந்து "இங்க இருந்து பாக்குறதுக்கு பதிலா அவங்க கூட போய் விளையாடலாம்ல" என்று கேட்க.
அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு "ஐயோ அங்கிள் நான் தான் அவங்க தெல்லாரு குதவும் டூ விட்டுட்டேன் இது குத தெய்யாதா" என்று தன் தலையில் அடித்தவாரு கூற.
அதை கேட்டு சத்தமாக சிரித்து விட்டான் அனிஷ். பின்பு "என் சண்ட போட்டிங்க. அவங்க என்ன சொன்னாங்க உன்ன பத்தி. யாரு கிட்டையும் சண்ட போட கூடாதுனு உங்களுக்கு தெரியாதா" என்று கேட்க.
அதற்க்கு அவனது மனசாட்சியோ "அதை நீ சொல்ல கூடாது ராசா" என்று கேலியாக சிரிக்க. அதை அவன் முறைத்த முறைப்பில் வாயை முடிகொண்டது.
"அங்கிள் அவங்க தெல்லாரும் என் தாதி பத்தி கேதாங்க எனக்கு தாதி தெய்யாதுல. பின்ன அவரை கேத்தா என்ன தொல்ல. அதோ இதுகான்ல மாது அவன் தாதி பெய்ய காது வச்சிருகாது என் அம்மா கித்த இல்லல அதான் கிந்தல் தெய்யுறான்" என்று தான் சண்டை இட்ட கதையை கூற.
அனிஷின் முகமோ யோசனையில் அவனது உரையாடலில் அவன் கூரிய "பெய்ய காது" என்ற வார்த்தையில் தேங்கி நின்றது.
பின்பு தான் புரிந்தது அது 'காது' அல்ல 'கார்' என்று. பின்பு அவன் கூரிய அம்மா அப்பா இல்லை என்ற வாக்கியத்தில் அவன் மனம் கனத்து போனது.
காரணம் அவன் அறிவானே தனி ஒரு மனிதனாக குழந்தையை வளர்ப்பது அவளவு எளிதான காரியம் அன்று.
இப்பொழுது அதிகரித்து வரும் விவாகரத்தும், சரியான புரிதல் இல்லாத உறவு முறையும், கோவம் எனும் அரக்கன் செய்யும் வேலைகளும் குடும்பத்தை சின்னா பின்னா மாக்குகிறதே.
அது மட்டுமா அதில் பெரிது பாதிக்க படுவது சிறியவர்களே. பெரியவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மட்டுமே பெரிதாக மதிகின்றனரே ஒழிய சிரியவர்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் கிச்சித்தும் நினைப்பதில்லை.
ஆணிற்க்கு குழந்தையை வளர்ப்பது மட்டுமே அவனை பொறுத்தவரை சவாலான விடயம்.
அதுவே பெண் என்றால் குழந்தையை சமாளிப்பதுடன் இந்த சமுதாயத்தின் எச்சுகளையும் பேச்சுக்களையும் தவறான பார்வையில் இருந்தும் தவறாக பார்ப்பவரிடம் இருந்தும் சமாளித்து வருவது சவாலிர்க்கும் மேலான விடயம்.
அதை அறிந்தவன் என்பதால் அக்குழந்தையின் தாயிற்காக வேதனை அடைந்ததுடன். அக்குழந்தையின் பால் அவனையும் அறியாமல் அன்பு உற்றெடுத்தது.
"அவ்வளவு தான என் கிட்ட அவன் அப்பா வச்சிருக்கிற கார விட பெரிய கார் இருக்கு வா நம்ம ஒரு ரவுண்ட் போகலாம்" என்று கூற.
"வெந்தாம் அங்கிள் தெய்யாதவங்க குபித்தா போக குதாதுனு அம்மா தொள்ளிருகாங்க" என்று கூற.
அவனது மனம் தன் மகளை நினைத்து கலங்கியது. நிகிதா எனும் அரக்கியை வெளி ஆலென்றும் பாராமல் தாயின் பாசத்திற்கு நெருங்க அவளை தள்ளி விட்டதை நினைத்து நரம்பு புடைத்தாலும் தாயின் வளர்ப்பு வேறு என்றே அவனது மனம் அடித்து கூறியது.
என்ன தான் தன் மகளிர்க்கு வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தும் பக்கத்தில் இருந்து அரவணைத்து அனைத்தையும் சொல்லி தர தாய் இல்லாததை நினைத்து கலங்கவே செய்தது.
தன் மகவை இப்படி தவிக்க விட்டு சென்றவள் மீது ஆத்திரம் கரை புரண்டோட. கையில் காயம் ஏற்பட்டதை மறந்து கை முஷ்டியை மடக்க அது தந்த வேதனையில் 'ஷ்ஷ்' என்று முனங்க.
அவனது முகம் வேதனையில் மாறுவதை கண்டு "அங்கிள் என்ன ஆச்சி" என்று அவனது கையை பிடித்து கேட்க.
அதில் இருந்த காயத்தை கண்டு "ஐயயோ நெத்தம்" என்று அலறியவன். பின்பு வேகமாக தன் அருகில் வைத்திருந்த தண்ணீர் குடுவையில் தனக்கென்று வைத்திருந்த தண்ணீரை அவனது கையில் உற்றி அதை கழுவ செய்தான்.
மீதம் இருந்த தண்ணீரை அவனை பருக செய்து அவனது தாய் அவனுக்கென்று எப்பொழுதும் கொடுத்தனுப்பும் முதலுதவி மருந்தை தனது கால் சட்டையில் இருந்து எடுத்து அவனிற்கு தடவியவன். தனது கைக்குட்டையை அந்த காயத்தின் மீது கட்டி விட்டான் அச்சிரிய மருத்துவன்.
"தோம்ப வலிக்குதா அங்கிள் சிக்கிதம் சதி ஆயிதும்" என்று அந்த காயத்தில் மீது உதடு குவித்து உத.
அதில் மென்னகை புரிந்தவன் "இதுலாம் உங்களுக்கு யாரு சொல்லி தந்தாங்க" என்று கேட்க.
"எங்க அம்மா தெப்பவும் நான் கிழ விதுந்து அழுவென் அதுனால இது தேப்பவும் உன் கித்த இதுகணும்னு அம்மா தந்தாங்க" என்று கூற.
"நல்ல விசயம் நிறைய சொல்லி தந்திருக்காங்க உங்க அம்மா. ஒரு காலத்துல எனக்கும் இப்படி தான் ஒரு ஜீவன் சொல்லி தருவா" என்று மனதினுள் புலம்பியவன்.
பெருமூச்சு ஒன்றை விட்டு "நீ எனக்கு இவ்வளவு ஹெல்ப் செஞ்சிருகல்ல சோ நான் உன்னை ஒரு ரவுண்ட் என் கார்ல குடிட்டு போறேன் அஷ் அ ஃப்ரெண்ட்டா ஓகே" என்று கேட்க.
ஏதோ அறிய வகை கண்டு பிடிப்பை கண்டு பிடிக்க போவதை போல விரலை தன் நாடியில் வைத்து யோசித்தவன். "ஓகே அங்கிள்" என்று தன் கட்டை விரலை காட்டினான்.
அவனை வாரி அனைத்து முத்தமிட்டு அவனது வகுப்பில் பொறுப்பில் இருக்கும் ஆசிரியரிடம் சொல்லி விட்டு அவனை அழைத்து சென்றான்.
அச்சிறுவனின் உண்மை கதை தெரிய வரும் போது என்னாகுமோ?
நிலா வருவாள்.
மறக்காம உங்க பொன்னான கருத்துகளை கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி சொல்லிருங்க ஃப்ரெண்ட்ஸ்…