அப்பொழுதுதான் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வந்த அர்ஜுனோ "அடிப்பாவி நா நான் என்னடி பண்ணேன்,
அம்மா இவ பொய் சொல்றா மா, ஆனால் உனக்கு ரொம்ப கொழுப்பு டி, எங்க அப்பா உனக்கு சப்போர்ட் பண்ணுவாரு தெரிஞ்சு தானே எப்ப பாரு கள்ள சாட்சிக்கு அவரே கூப்பிடுற? கொன்றுவேன் உன்னை,
ஒழுங்கா உண்மைய சொல்லு…" என்று கூறியவனோ ஒரு நிமிட யோசனைக்கு பின் "ஆமா என்ன உண்ம அது,
நான் வரும்போது இவகிட்ட என்னமோ கேட்டுட்டு இருந்தீங்களே, எந்த குத்ததுக்கு பழிய தூக்கி இவ என் மேல போட்டா…" என்று சாவுகாசமாக விளக்கம் கேட்க,
"பாத்திங்களா மா, இவன் நிறைய தப்பு பண்ணி இருக்கான், அதுனால தான் அதுல இது எந்த தப்புனு கேட்கிறான்…"
அவள் பேச்சை கேட்டு சிரித்தவரோ அவள் காதை திருகிய படி,
"வாலு கொஞ்சம் நேரம் அமைதியா இருந்தா, அதுக்குள்ள என் பையனேயே என்கிட்ட மாட்டி விட்ரியா,
அதுக்கு அவங்க அப்பா சப்போர்ட் வேற…" என்று அவ காதை திருகியவரிடம் இருந்து காதை காப்பாற்ற போராடியபடி,
"ஆ அம்மா, வலிக்குது வலிக்குது, நான் என்ன தப்பு பண்ணாலும் அதுக்கு முழு காரணம் அர்ஜுனா தான் எப்பவும் இருப்பான்,
அதான் அப்படி சொன்னேன் ஆ வலிக்குது, விட்ருங்க அம்மா…" என்று கூச்சல் இட்டவளின் காதில் இருந்து கை எடுத்தவர்,
"ரெண்டு பேரும் ஒழுங்கா இந்த மாதம் முழுவதும் காலேஜ் போனீங்கனு நினைச்சா, இன்னைக்கு மறுபடியும் காலேஜ் கட் அடிச்சு இருக்கீங்க அப்படித்தானே…" என்றவர்
"உங்க மேம் ஃபோன் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணாங்க, அது கூட பரவால்ல டா,
போனை வைக்கிறதுக்கு முன்னாடி, சரண்யா அப்பா ஒவ்வொரு தடவ கம்ப்ளைன்ட் பண்ணும் போதும் கோபமா நா கண்டிச்சு வைக்கிறேன்னு சொல்றாரு,
ஆனா அதுக்கப்புறம் இந்த பொண்ணு எப்படித்தான் இப்டி பயமில்லாமல் தப்பு பண்ணுதோ,
அது மட்டும் தான் எனக்கு புரியவே இல்லைனு, சொல்லிட்டு போனை வச்சாங்க…" என்று கூறியவர்,
"அண்ணா கண்டிச்ச நீங்க ஏன் இப்படி இருக்க போறீங்க, உங்கள கெடுக்கிறதே இந்த அண்ணன் தான்…" என்றவர்
"சரி இந்த தடவை என்ன காரணம் சொல்ல போறீங்க?" என்று வினவ "அதை ஏம்மா கேக்குறீங்க?" என்று அலுத்தபடி பேசிவாறு ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவள்,
அங்கிருந்து ஒவ்வொரு பாத்திரத்தின் மூடியையும் திறந்து பதார்த்தங்களை ஆராய்ந்த படி,
"இப்பவும் சொல்றேன் இதுக்கு காரணமும் அர்ஜுன் தான்…" என்று கூறியவள் "நேத்து என்ன நடந்தது தெரியுமா?" என்று கேள்வியாக ஆரம்பிக்க.
மல்லிமாவோ மூவரின் முன்பும் தட்டெடுத்து வைத்து உணவு பரிமாறியபடி,
அவளின் பேச்சிற்கு "உகும்…" என்று கதை கேட்க "காலேஜ்ல எங்க கிளாஸ் கார்த்திக்கு ஒரு பையன் இருக்கான் மா, நல்ல அழகா இருப்பான்…" என்றவள் அர்ஜுனின் முறைப்பை கண்டு கொள்ளாமல்,
மேலும் தொடர்ந்து "நல்லா படிப்பான். அவன் நேத்து திடீர்னு நான் கேண்டின்ல இருக்கும்போது என்கிட்ட வந்து ஒரு லெட்டரை நீட்டி, ஐ லவ் யூனு சொல்லி ப்ரொபோஸ் பண்ணிட்டான்,
நான் அப்படியே ஒரு நிமிஷம் ஜர்க் ஆயிட்டேன். அப்புறம் தான் கண்ணா இதுவரைக்கும் இந்த சரண்யா ரிஜெக்ட் பண்ணி நீங்க யாரும் பார்த்ததில்லைல,
இப்ப பாப்பிங்க, அப்படின்னு மனசுல நினைச்சுகிட்டு உற்சாகமா அவன ரிஜெக்ட் பண்ண வரதுக்குள்ள,
உங்க அருந்தவாலு புதல்வன் இருக்கானே இந்த லூசு அர்ஜுன், அவனை எத்தி ஒரே மிதி அடுத்த நிமிஷம் என் எதிர்ல நின்னவன் குப்புற கிடந்தான்,
அப்புறம் என்ன ரெண்டு பேரும் மாறி மாறி அடிச்சுகிட்டு வா சுருதி போலாம்னு என் கைய புடிச்சு இழுத்துட்டு நேரா வீட்டுக்கு வந்துட்டான்,
இல்ல தெரியாம தான் கேட்கிறேன்? நான் என்ன சின்ன குழந்தையா எனக்கு எது நல்லது கெட்டதுன்னு தெரியாது?
ஒழுங்கா நானே நோனு சொல்லிருப்பேன் மா, அதோட பிரச்சனை முடிஞ்சு இருக்கும்.
அத விட்டுட்டு சண்டை போட்டு மொத்த காலேஜுக்கும் நியூஸ் கொடுத்துட்டு வந்திருக்கான்,
இதுக்கு தான் சண்டை போட்டோம். அப்புறம் அப்பா பேசி சமாதானப்படுத்தி அவதார் படத்துக்கு அனுப்பி வச்சாரு,
அவ்வளவுதாமா இப்ப சொல்லுங்க தப்புக்கு இவன் தானே காரணம்…" என்று கூறியபடி உணவை வாயில் அடைத்தாள்.
மல்லிமாவோ "அவ சொல்றதுல என்னடா தப்பு இருக்கு, ஒழுங்கா பிள்ளையே பிடிக்கலனு சொல்லியிருப்பா,
அத விட்டுட்டு தேவையில்லாத பிரச்சினைய கிளப்பிட்டு வந்திருக்க நீ இது என்ன அடிக்கிற பழக்கம் உனக்கு…" என்று அதட்டியவர்,
"முதல்ல அப்பா வரட்டும், இன்னைக்கு உனக்கு பஞ்சாயத்து வைக்கிறேன்…" என்று கூற
"ஐயோ அம்மா, உங்க கால்ல வேணாலும் விழுறேன், தயவு செஞ்சு அப்பாட்ட மட்டும் மாட்டி விட்டுராதீங்க மா பிளிஸ்…" என்ற அர்ஜுனின் கெஞ்சலில் சிரிப்புடன் இடையிட்ட சரண்யாவோ,
"அம்மா பாவம் பிள்ள ரொம்ப கெஞ்சுறான், பொழைச்சு போட்டும் தண்டனை எல்லாம் வேண்டாம் சின்னதா பனிஷ்மென்ட் ஒன்னு மட்டும் கொடுக்கலாம்,
என்ன பனிஷ்மென்ட் குடுக்கலாம், ஹான் என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போக சொல்லுங்க பாப்போம்…" என்று கூற,
"எதே ஷாப்பிங்கா, அதுக்கு வேற ஆள பாருடி அதுக்கு நான் எங்க அப்பா குடுக்குற தண்டனையையே எத்துப்பேன், முனு மணி நேரமா இல்ல எட்டு மணி நேரமானு யோசிச்சா எனக்கு எட்டு மணி நேரம் தாண்டி பெருசு…" என்று சிலுப்ப
"ஹலோ தம்பி இது பனிஷ்மென்ட், நாங்க சொல்றது தான் நீ கேக்கணும் இப்ப எதிர்த்து பேசுனதுக்கு பனிஷ்மெண்ட்டா?
இன்னிக்கு ஈவினிங் என்னையும் அம்மாவையும் பீச்சுக்கு கூட்டிட்டு போ, கரெக்ட்தானம்மா…" என்றவளின் ஆர்ப்பரிப்பிற்கு சம்மதமாக தலையாட்டினார் மல்லிகா.
"என் பர்சுக்கு ஆப்ரேஷன் பண்ண பிளான் பண்ணிட்டாடா…" என்று புலம்பியவன்,
"சரி கிளம்பி தொல…" என்க அதற்கோ "இப்ப எங்க கூப்புடுற ஈவினிங் தான் பீச், இப்ப நானும் அம்மாவும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க போறோம்…" என்று அவரையும் இழுத்துக் கொண்டு அவரின் அறைக்குள் நுழைந்திருந்தாள் சரண்யா.
தூக்கத்தில் இருந்தவளை அதட்டி உருட்டி எழுப்பி ஒருவழியாக அவர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்து சேர்ந்திருந்தான்.
வரும் வழியிலேயே அங்கு என்னென்ன வாங்கி உண்ண வேண்டும் என்பதை மல்லி அம்மாவுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தியவள்,
கடற்கரைக்கு வந்த நொடியில் இருந்து "டேய் அச்சு குட்டி, சாரு குட்டிக்கு பானி பூரி வாங்கி தாடா…" என்று கேட்ட தொடங்கியவள்,
ஒவ்வொரு கடையின் அருகேயும் சிறு வயது அழைப்பான அதே அச்சு குட்டியையும் சாரு குட்டியையும் உபயோகப்படுத்தி வாங்கி உண்டவாரே நடக்க தொடங்கினாள்.
இடை இடையே அர்ஜுனுக்கும் மல்லி மாவிக்கும் ஊட்டி விட்டவாறு, அடுத்து எதை வாங்குவது என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் நடந்தவள்,
கடற்கரையை நெருங்கவும் மத்ததெல்லாம் மறக்க சந்தோஷ ஆர்ப்பரிப்புடன் மல்லி மாவை இழுத்துக் கொண்டு கடலில் நுழைந்திருந்தாள்.
கடலில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த இருவரையுமே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் கரை மேல் இருந்த அர்ஜுன்.
அவனைப் போலவே அவளின் உற்சாக குரலையும் முகத்தில் மின்னும் சந்தோஷத்தையும்,
அவள் வாழ்க்கையை திசை மாற்ற போகும் இன்னொருவனின் இரு கூரிய விழிகளும் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.
தொடரும்.